5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்
வகுத்தல்
5. வகுத்தல்
சபரி என்பவர் கோவலூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தார். அவர் ஒரு விவசாயி, அவருக்கு பசுமாடு ஒன்றும் இருந்தது. அந்த பசுமாடு நாளொன்றுக்கு 8 லிட்டர் பால் கொடுத்தது. ஒரு மாதத்திற்கு 240 லிட்டர் பால் கிடைத்தது.
தினசரி ஒவ்வொரு வீட்டிற்கும் 1 லிட்டர் என 8 வீடுகளுக்கு வழங்கி வந்தார் எனில் ஒவ்வொரு வீட்டினரும் எவ்வளவு பால் ஒரு மாதத்தில் வாங்கி இருப்பர்?
நாம் இப்போது 240 ஐ 8 பாகமாக பிரிக்க வேண்டும்.
இதை நாம் வருத்தல் அல்லது திட்ட வகுத்தல் படிகள் மூலம் கண்டுபிடிக்கலாம்.
படி : 1240 ஐ வகுக்கப் போகிறோம் 240 ஐ வகுபடும் எண் என்கிறோம்.
240 ஐ 8 பாகங்களாக பிரிக்கிறோம் எனவே 8 என்பது வகுக்கும் எண் ஆகும்.
இங்கு 24-ல் மூன்று எட்டுகள் உள்ளன (8 + 8 + 8 = 24). 3 ஐ கோட்டுக்கு மேல் எழுதவும் \(3 \times 8 = 24\). இங்கே காண்பித்துள்ளதுபோல் 24 ஐ 240 க்கு கீழே இடதுபக்கமாக எழுத ஆரம்பிக்கலாம்.
அடுத்ததாக '0' வை கீழே இறக்கவும். '0' வை 8 – ஆல் வகுக்க இயலாது. எனவே மேலே 3 க்கு பக்கத்தில் '0' வை போடவும் 30 ஈவு ஆகும். ஆகவே ஒவ்வொரு வீட்டினரும் ஒரு மாதத்திற்கு 30 லிட்டர் பால் வாங்குகிறார்கள்.
2. ஈவுமத்தும் மீதியைக் கண்டுபிடி \(53675 \div 8\)
வகுபடும் எண் = 53675
வகு எண் = 8
ஈவு = 6709
மீதி = 3