6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : இயற்கை இன்பம்
இலக்கணம்: முதலெழுத்தும் சார்பெழுத்தும்: கேள்விகள் மற்றும் பதில்கள்
6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : இயற்கை இன்பம் : இலக்கணம்: முதலெழுத்தும் சார்பெழுத்தும்: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்
மதிப்பீடு
1. முதல் எழுத்துகள் என்பவை யாவை? அவை எதனால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன? விடை: உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும். பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவை முதல் எழுத்துகள் என்று அழைக்கப்படுகிறது. 2. சார்பெழுத்துகள் எத்தனை? அவை யாவை? விடை: சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். அவை.2. ஆய்தம்
3. உயிரளபெடை
4. ஒற்றளபெடை
5. குற்றியலிகரம்
6. குற்றியலுகரம்
7. ஐகாரக்குறுக்கம்
8. ஒளகாரக்குறுக்கம்
9. மகரக்குறுக்கம்
10. ஆய்தக்குறுக்கம்
மொழியை ஆள்வோம்!
கேட்டும் கண்டும் அறிந்தும் மகிழ்க
1. இயற்கை சார்ந்த பாடல்கள், கதைகள், உரைகளைக் கேட்டு மகிழ்க.
விடை: இயற்கை சார்ந்த பாடல்கள், கதைகள், உரைகளை மாணவர்கள் தாங்களாகவே கேட்டு அறிந்துகொள்ளுதல் வேண்டும்.
2. பறவைகள், விலங்குகளின் வாழ்க்கை முறை பற்றிய காணொலிக் காட்சிகளைக் கண்டு மகிழ்க.
விடை: மாணவர்கள் பறவைகள், விலங்குகளின் வாழ்க்கை முறை பற்றி காணொலிக் காட்சிகளைத் தாங்களாகவே கண்டு அறிந்து கொள்ள வேண்டும்.
கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக
மாமழை
வான் சிறப்பு
முரல் மீன்
வலசைபோதல்
பறவை இனங்கள்
சார்பு எழுத்துகள்
சாண்டியாகோ
தோற்கடிக்க முடியாது
காணிநிலம்
இயற்கையைக் காப்போம்
மொழியோடு விளையாடு
திரட்டுக. கடல் என்னும் பொருள் தரும் வேறு சொற்களைத் திரட்டுக.
2. அலை
3. ஆர்கலி
4. ஆழி
5. திரை
6. விரிநீர்
7. முந்நீர்
8. பரவை
9. சமுத்திரம்
10. அழவம்
11. பெருநீர்
12. பௌவம்
(எ.கா.) பல நாள்களாக மழை பெய்யாததால் பயிர்கள் வாடின.
விடை: பல நாள்களாக மழை பெய்யவில்லை. பயிர்கள் வாடின.
1. பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப் பரவை என்று பெயர். (பறவை / பரவை)
2. இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக உரை ஆற்றினார். (உரை / உறை)
3. முத்து தம் பணி காரணமாக ஊருக்குச் சென்றார். (பனி / பணி)
4. கலைமகள் தன் வீட்டுத் தோட்டத்தைப் பார்க்க வருமாறு தோழியை அழைத்தாள். (அலைத்தாள் / அழைத்தாள்)
பொருத்தமான சொற்களால் கட்டங்களை நிரப்புக.1. 'புள்' என்பதன் வேறு பெயர்
2. பறவைகள் இடம்பெயர்தல்
3. சரணாலயம் என்பதன் வேறு பெயர்
வரிசை மாறியுள்ள சொற்களைச் சரியான வரிசையில் அமைத்து எழுதுக.
1. இளங்கோவடிகள் காப்பியத்தை என்னும் இயற்றியவர் சிலப்பதிகாரம்.
விடை: சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.
2. மனிதன் உலகில் இல்லாத பறவை வாழ முடியாது.
விடை: பறவை இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது.
3. மிகப்பெரிய சாண்டியாகோ மீளைப் பிடித்தார்.
விடை: சாண்டியாகோ மிகப்பெரிய மீனைப் பிடித்தார்.
4. மனிதர் இந்தியாவின் டாக்டர் சலீம் அலி பறவை.
விடை: இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி.
கட்டங்களில் சில சொற்கள் மறைந்துள்ளன. குறிப்புகளைக் கொண்டு அவற்றைக் கண்டுபிடித்து எழுதுக.
1. இரட்டைக் காப்பியங்களில் ஒன்று: மணிமேகலை
2. முதலெழுத்துகளின் எண்ணிக்கை: முப்பது
3. திங்கள் என்பதன் பொருள்: நிலவு
4. சத்திமுத்தப் புலவரால் பாடப்பட்ட பறவை: செங்கால் நாரை
5. பாரதியார் காணி நிலம் வேண்டும் என்று பாடுகிறார்.
6. ஆய்த எழுத்தின் வேறு பெயர்: தனிநிலை
ஆய்ந்தறிக. பெருகிவரும் மக்களின் தேவைக்காக இயற்கையை அழிப்பது சரியா? இயற்கையைச் சுரண்டாமல், மக்களின் தேவைகளை நிறைவேற்ற மாற்று வழிகள் உண்டா?வானில் இருந்து வந்திடும்
மனதில் மகிழ்ச்சி தந்திடும்
ஆற்றில் வெள்ளம் பெருகிடும்
அணைகள் நிரம்பி வழிந்திடும்
நிலத்தடி நீரும் ஊறிடும்
பயிர்கள் செழிக்க உதவிடும்
இயற்கை எல்லாம் சிரித்திடும்
இன்பக் கடலில் ஆழ்த்திடும்
பட்ட மரங்கள் துளிர்த்திடும்
பாரே உன்னைப் போற்றிடும்.
என் பொறுப்புகள்...
அ) சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வேன்
ஆ) இயற்கையைப் பாதுகாப்பேன்
இணையத்தில் காண்க
அழித்து வரும் உயிரினங்கள்பற்றி இணையத்தில் தேடி அறிந்து பட்டியவிடுக.
இணையச் செயல்பாடுகள்பறவைகள் வலசைபோதல்
செயல்பாட்டில் கிடைக்கப்பெறும் படம்
படிகள்:
1. கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி 'globeofbird migration' என்னும் இணையச் செயலியின் பக்கத்திற்குச் செல்லவும்.
2. இணையச் செயலி இயங்கு நிலைக்கு வர, சற்று நேரம் ஆகும். அதுவரை காத்திருக்கவும். இணையச்செயலி தயார் நிலைக்கு வந்தவுடன் ஓர் உலக உருண்டையைக் காணலாம். அதன் மையத்தில் இருக்கும் 'Click to Start' என்பதைச் சொடுக்கவும். இப்போது திரையின் இடப் பக்கத்தில் பறவைகளின் பெயர்ப் பட்டியல் தெரியும். அதில் ஏதேனும் ஒரு பறவையைத் தெரிவு செய்து அதன் வலசை போகும் பாதையைத் தெரிந்து கொள்ளலாம்.
3. பூமி உருண்டையைச் சுழற்றுவதன் மூலம் வெவ்வேறு பறவைகளின் வலசை போதலை அறியலாம்.
செயல்பாட்டிற்கான உரலி: Intp://globeofbirdmigration.com/
கற்பவை கற்றபின்
1. முதல் எழுத்துகள், சார்பு எழுத்துகள் தொடர்பைப் பற்றி விவாதிக்க
மாணவன் 1: வணக்கம்! இன்று வகுப்பில் ஆசிரியர் இலக்கணம் கற்பித்ததில் எனக்கு ஓர் ஐயம் உள்ளது. அதனைக் கொஞ்சம் தீர்த்து வைக்க இயலுமா.
மாணவன் 2: உன்னுடைய ஐயம் என்னவென்று கூறு. என்னால் இயன்றவரை கூறுகிறேன். முதலெழுத்து, சார்பெழுத்து பற்றித்தானே!
மாணவன் 1: ஆமாம்... ஆமாம்... முதலெழுத்து என்பது முப்பது. அவை உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மெய்யெழுத்துகள் பதினெட்டும் ஆகும்.
மாணவன் 2: சரிதான். எழுதப்படுவதால் எழுத்து எனக் கூறப்படுகிறது. எழுத்துக்கள் ஒலி வடிவம், வரி வடிவம் என்ற இருவகை வடிவினை உடையன. இதில் வரி வடிவ எழுத்துகளையே நாம் முதலெழுத்து, சார்பெழுத்து என இருவகையாகப் பகுத்துக் கூறுகிறோம்.
மாணவன் 1: முதலெழுத்து எனக் கூறக் காரணம் என்ன?
மாணவன் 2: இம்முப்பது எழுத்துகள் இல்லாமல் தமிழ்மொழி இல்லை. ஆதலாலும் இவ்வெழுத்துகள் ஏனைய உயிர் மெய்யெழுத்துகள் பிறப்பதற்கு முதன்மையாய் இருப்பதாலும் இவை முதல் எழுத்துகள் எனப்பட்டன.
மாணவன் 1: சார்பெழுத்து என்பது காரணப் பெயராகும். சார்ந்து வருதலாலே இப்பெயர் பெற்றுள்ளது. எழுத்துகள் ஒலி வடிவில் ஒன்றையொன்று சார்ந்து வருவதால் சார்பெழுத்தாயிற்று. சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். அவை உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் என்பனவாகும்.
மாணவன் 2: சரியாகக் கூறியுள்ளாய். மெய்யெழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன. உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும். வரிவடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும். ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும். இவ்வாறு முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்குகிறது. உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் 216 ஆகும்.
மாணவன் 1: அடுத்ததாக உள்ள சார்பெழுத்து ஆய்த எழுத்து. இது மூன்று புள்ளிகளை உடையது. தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும். தனித்து இயங்காது. முதல் எழுத்துகளாகிய உயிரையும் மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆயிற்று.
மாணவன் 2: இதேபோன்று உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக் குறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக் குறுக்கம் முதலியவை பிற எழுத்துகளின் சார்பினாலேயே ஓசையில் நீண்டும், ஓசையில் குறைந்தும் ஒலிக்கும். ஆதலால் இவை சார்பெழுத்துகள் எனப்பட்டன.
மாணவன் 1: ஓசையில் நீண்டும், குறைந்தும் என்கிறாயே? அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்.
மாணவன் 2: உயிரளபெடையும் ஒற்றளபெடையும் மாத்திரையளவில் நீண்டு ஒலிக்கும். (எ.கா.) 1. உயிரளபெடை – தொழாஅர், கெடுப்பதூஉம் 2. ஒற்றளபெடை – கலங்கு.
மாணவன் 1: ஓசை குறைதல் என்றாயே?
மாணவன் 2: ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம், மகரக் குறுக்கம் ஆகியவை தன் மாத்திரை அளவில் குறைந்து ஒலிக்கும். (எ.கா.) ஐகாரக் குறுக்கம் – தலைவன்; ஔகாரக் குறுக்கம் – ஔவையார்; மகரக்குறுக்கம் – வரும் வண்டி; ஆய்தக் குறுக்கம் – அஃறிணை. இதேபோன்று குற்றியலுகரம், குற்றியலிகரம், இவையிரண்டும் தன் மாத்திரையளவில் குறைந்து ஒலிக்கும். (எ.கா.) குற்றியலுகரம் – காது, அஃது, பாக்கு; குற்றியலிகரம் – வீடு + யாது – வீடியாது, கேண்மியா, சென்மியா.
மாணவன் 1: முதலெழுத்து, சார்பெழுத்தைப் பற்றி இனிமேல் மறக்கவே முடியாது. அதுபோல நன்கு விளங்கும்படிக் கூறியுள்ளாய் மிக்க நன்றி.