5 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 3 : தாவரங்கள்
5th Science : Term 2 Unit 3 : Plants
புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், மதிப்பீடு, சரியான விடையைத் தேர்ந்தெடு, கோடிட்ட இடத்தை நிரப்புக, சரியா அல்லது தவறா எனக் கூறுக, பொருந்தாத ஒன்றை வட்டமிடு, பொருத்துக, சுருக்கமாக விடையளி, விரிவாக விடையளி, உயர் சிந்தனை வினாக்கள்.
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு
[விடை : (iii) மகரந்தத்தாள் வட்டம்]
2. காற்றின் மூலம் நடைபெறும் மகரந்தச்சேர்க்கைக்கு ------------ என்று பெயர்.
[விடை : (i) அனிமோஃபிலி]
3. நீர் மூலம் விதை பரவும் முறைக்கு ------------ என்று பெயர்.
[விடை : (ii) ஹைட்ரோகோரி]
4. எண்டொமோஃபிலி என்பது
[விடை : (i) பூச்சிகள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை]
5. கீழ்க்காண்பவற்றுள் எதில் காற்றின்மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது?
[விடை : (i) புல்]
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. விதை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரவுவதற்கு --------- என்று பெயர்.
விடை : விதை பரவுதல்
2. கனி வெடித்து விதை பரவுவதற்கு ---------- என்று பெயர்.
விடை : சுயவழியில் விதைபரவுதல்
3. விதையானது கருத்தரித்த --------- ஆகும்.
விடை : சூல்
4. நெல்லானது --------- மண்ணில் நன்கு வளரும்.
விடை : களி
5. பெரிய அளவு மண் துகள்களைக் கொண்டது ------- ஆகும்.
விடை : மணல்
III. பொருத்துக.
சிந்தித்துப் பொருத்துக (வினாக்கள்):
(i) மண்புழு – கொசுக்களின் முட்டை மற்றும் லார்வாக்களை அழிக்கின்றது.
(ii) பறவைகள் – தேன்
(iii) தேங்காய் – பறவைகள் மூலம் மகரந்தசேர்க்கை
(iv) தேனீக்கள் – நீரின் மூலம் பரவுதல்
(v) தட்டான் – மண்புழு உரமாதல்
(ii) பறவைகள் – தேன்
(iii) தேங்காய் – பறவைகள் மூலம் மகரந்தசேர்க்கை
(iv) தேனீக்கள் – நீரின் மூலம் பரவுதல்
(v) தட்டான் – மண்புழு உரமாதல்
சரியான விடை:
(i) மண்புழு – மண்புழு உரமாதல்
(ii) பறவைகள் – பறவைகள் மூலம் மகரந்தசேர்க்கை
(iii) தேங்காய் – நீரின் மூலம் பரவுதல்
(iv) தேனீக்கள் – தேன்
(v) தட்டான் – கொசுக்களின் முட்டை மற்றும் லார்வாக்களை அழிக்கின்றது
(ii) பறவைகள் – பறவைகள் மூலம் மகரந்தசேர்க்கை
(iii) தேங்காய் – நீரின் மூலம் பரவுதல்
(iv) தேனீக்கள் – தேன்
(v) தட்டான் – கொசுக்களின் முட்டை மற்றும் லார்வாக்களை அழிக்கின்றது
IV. சுருக்கமாக விடையளி
1. மகரந்தச் சேர்க்கை என்றால் என்ன?
விடை : மகரந்தத்தூளானது மகரந்தத்தாள் முடியிலிருந்து சூலக முடியைச் சென்றடைவது மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
2. விதை முளைத்தல் என்றால் என்ன?
விடை: விதையானது ஒரு கருவுற்ற சூல் ஆகும். இதில் முளைக்கரு மற்றும் உணவுப் பொருள்கள் விதை உறையால் பாதுகாக்கப்பட்டிருக்கும். சாதமான சூழ்நிலை வரும்போது, விதை முளைத்து ஒரு புதிய செடியாக வளரும்.
3. மண் எவ்வாறு உருவாகிறது?
விடை: பாறை, காற்று, மழை மற்றும் தட்பவெப்பநிலை ஆகியவற்றின் செயல்பாட்டினால் பாறைகள் உடைக்கப்படும்போது மண் உருவாகிறது.
4. மண்புழு உரம் என்றால் என்ன?
விடை: மக்கும் கழிவுப் பொருள்களை மண்புழுக்கள் உரமாக மாற்றும் நிகழ்விற்கு மண்புழு உரமாக்கல் என்று பெயர்.
5. விதைகள் எவ்வாறு நீர் மூலம் பரவுகின்றன?
விடை: நீர் மூலம் பரவும் கனிகள் மிதந்து செல்வதற்கு ஏற்ற வெளியுறையைக் கொண்டுள்ளன. தேங்காயின் இடை அடுக்காது நாரினால் அமைந்துள்ளதால் அது எளிதில் – நீரினால் அடித்துச் செல்லப்படுகிறது. அது பல்வேறு இடங்களைச் சென்றடைந்து புதிய தாவரமாக வளர்கின்றது. எ.கா : தாமரை, தேங்காய்
V. விரிவாக விடையளி.
1. தாவர பாகங்கள் பற்றி குறிப்பெழுதுக
விடை: ஒரு தாவரம் இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டது. தரைக்கு மேலே வெளியே தெரியும் தாவரப் பகுதி தண்டுத் தொகுதி எனப்படுகிறது. தரைக்குக் கீழே உள்ள தாவரத்தின் பகுதி வேர்த் தொகுதி எனப்படும். தண்டுத் தொகுதியில் தண்டு, இலைகள், கிளைகள், பூக்கள், காய்கள், கனிகள் ஆகியவை காணப்படுகின்றன. வேர்த் தொகுதியில் ஆணி வேர், பக்க வேர் போன்ற வேர்கள் காணப்படுகின்றன. இரு வித்தலைத் தாவரங்களுக்கு நீளமான ஆணிவேர் உண்டு. ஒரு வித்திலைத் தாவரங்களுக்கு சல்லி வேர்கள் உண்டு.
2. மகரந்தச் சேர்க்கையின் முறைகளை விவரி
விடை: மகரந்தத்தூளானது ஒரு மலரின் மகரந்ததாள் முடியிலிருந்து அதே மலரின் சூலக முடியைச் சென்றடைவது தன் மகரந்தச்சேர்க்கை எனப்படும். மகரந்தத்தூளானது ஒரு மலரின் மகரந்த்தாள் முடியிலிருந்து அதே வகைத் தாவரத்தின் வேறொரு மலரின் சூலக முடியைச் சென்றடைவது அயல் மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
தன் மகரந்தச் சேர்க்கையில் விதைகள் வீரியமற்ற தாவரங்களை உருவாக்குகின்றன. அவை புதுவகைத் தாவரங்களை உருவாக்கமுடியாது. ஆனால், அயல்மகரந்தச் சேர்க்கையில் விதைகள் தரமான தாவரங்களை உருவாக்குகின்றன. மேலும், புதுவகைத் தாவரங்கள் அதிலிருந்து உருவாகின்றன. மகரந்தச் சேர்க்கை பலவிதங்களில் நடைபெறுகிறது. இம்முறைகள் கீழே விளக்கப்பட்டுள்ளன.
காற்று மூலம் மகரந்தச்சேர்க்கை (அனிமோஃபிலி):
காற்றுமூலம் மகரந்தச் சேர்க்கையுறும் மலர்கள் அளவில் சிறியதாக உள்ளன. அவை வண்ணமயமான நிறம், வாசனை மற்றும் மகரந்தத் தேன் ஆகியவற்றைக் கொண்டிருப்பதில்லை. இவற்றின் மகரந்தத் தூள்கள் ஒட்டும் தன்மையற்ற, காய்ந்த, இலேசான பொடி போன்று காணப்படும். எனவே, இவை, எளிதில் காற்றில் எடுத்துச் செல்லப்படுகின்றன. எ.கா: புல், சோளம், பைன்
நீர் மூலம் மகரந்தச்சேர்க்கை (ஹைட்ரோஃபிலி):
நீர்த்தாவரங்களின் மலர்கள் நிறமற்றவை. அவற்றில் மகரந்தத் தேன் காணப்படுவதில்லை. அவற்றின் மகரந்த தூள் – ஈரமடையாத வகையில் அவை ஒருவகை பிசினால் மூடப் பட்டுள்ளன. எ.கா:வாலிஸ்னேரியா, ஹைட்ரில்லா, சோஸ்டேரியா
பூச்சிகள் மூலம் மகரந்தச்சேர்க்கை (எண்டோமோஃபிலி):
இது சூரியகாந்தி, வெண்டை, கத்தரி மற்றும் பூசணி போன்றவற்றில் நடைபெறும் பொதுவான மகரந்தசேர்க்கை – முறை ஆகும். ஒருசில மலர்கள் அளவில் பெரிதாகவும், இனிய நறுமணம் உடையவையாகவும் காணப்படுகின்றன. இவை ) வண்ணத்துப்பூச்சி மற்றும் தேனீக்கள் போன்ற பூச்சி இனங்களைக் கவர்கின்றன.
3. மலரின் படம் வரைந்து அதன் பாகங்களைக் குறிக்கவும்.
செயல்பாடுகள்
செயல்பாடு 1
ஒரு செம்பருத்தி மலர் அல்லது ரோஜா மலரை எடுத்துக்கொள்ளவும். அவற்றின் பாகங்களான அல்லிவட்டம், புல்லிவட்டம், மகரந்தகம் மற்றும் சூலகங்களைப் பிரித்து அட்டைத்தாளில் ஒட்டி அதன் வண்ணம் மற்றும் வடிவங்களைக் குறிக்கவும்.
செயல்பாடு 2
கீழ்க்காணும் தாவரங்களை அவற்றில் நடை பெறும் மகரந்தசேர்க்கை முறைகளுக்கேற்ப அட்டவணைப்படுத்துக.
வாலிஸ்னேரியா, ஹைட்ரில்லா, சூரியகாந்தி, புல், கத்தரிச்செடி, சோளம், பூசணி
செயல்பாடு 3
உங்கள் பகுதியில் வளரும் பலவகையான விதைகளைச் சேகரிக்கவும். அவை ஒருவிதையிலைத் தாவரத்தைச் சார்ந்தவையா அல்லது இருவிதையிலைத் தாவரத்தைச் சார்ந்தவையா எனக் கண்டறிக.
செயல்பாடு 4
சிறகு, முடி, கொக்கி, முள் மற்றும் ஓடு போன்ற அமைப்புக் கொண்ட விதைகளைச் சேகரிக்கவும், அவற்றை அட்டைப் பெட்டியில் தனித்தனியாக வைக்கவும் அவற்றின் பெயரையும், அவை எவ்வாறு பரவுகின்றன என்பதையும் கண்டறிக.
செயல்பாடு 5
சிறிதளவு மண்ணை எடுத்து அதனைப் பொடியாக்கவும். அதனை ஒரு கண்ணாடி டம்ளரில் எடுத்துக்கொண்டு. அதில் சிறிது நீர் ஊற்றி நன்றாகக் கரையும்வரை ஒரு குச்சியால் கலக்கவும். அதனை சிறிது நேரம் அசைக்காமல் வைக்கவும். சிறிது நேரம் கழித்து அதில் பலவித அடுக்குகளைக் காணலாம். நீரின்மேல் மிதக்கும் அழுகிய கழிவு கரிம மட்கு ஆகும். அதையடுத்து களிமண், மணல் மற்றும் கற்கள் ஆகிய அடுக்குகளைக் காணலாம். இதிலிருந்து மண் பலவித பொருள்களின் கலவை என்பதை அறிந்துகொள்ளலாம்.
செயல்பாடு 6
உனக்கு அருகாமையிலுள்ள பண்ணைத் தோட்டத்திற்குச் சென்று அங்கு செடிகள் எவ்வாறு வளர்கின்றன என்பதை உற்றுநோக்கவும். அதைப்பற்றி ஒரு அறிக்கை தயாரிக்கவும்.