5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : மொழி
இலக்கணம் : மரபுச்சொற்கள்: கேள்விகள் மற்றும் பதில்கள்
5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : மொழி : இலக்கணம் : மரபுச்சொற்கள்: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்
மதிப்பீடு
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.
ஆ. ஒலி மரபுகளைப் பொருத்துக.
1. சிங்கம் – கூவும்
2. அணில் – அலப்பும்
3. மயில் – முழங்கும்
4. குயில் – கீச்சிடும்
5. குரங்கு – அகவும்
1. சிங்கம் – முழங்கும்
2. அணில் – கீச்சிடும்
3. மயில் – அகவும்
4. குயில் – கூவும்
5. குரங்கு – அலப்பும்
இ. உயிரினங்களின் படங்களுக்கு உரிய ஒலிமரபை வட்டமிடுக.
ஈ. வினை மரபுகளைப் பொருத்துக.
2. முறுக்கு – எய்தான்
3. உணவு – குடித்தான்
4. அம்பு – தின்றான்
5. பூ – உண்டான்
1. நீர் – குடித்தான்
2. முறுக்கு – தின்றான்
3. உணவு – உண்டான்
4. அம்பு – எய்தான்
5. பூ – பறித்தாள்
உ. ஒலிமரபுச் சொற்களை எழுதுக
ஊ. வினாக்களுக்கு விடையளிக்க
விடை : நம் முன்னோர்கள் எப்பொருளை எச்சொல்லால் எவ்வாறு வழங்கினார்களோ, அப்பொருளை அச்சொல்லால் அவ்வாறே வழங்குவது மரபு.
விடை : பாடப்பகுதியில் ஒலி மரபு, இளமைப் பெயர் மரபு, வினைமரபு, உறுப்புப் பெயர் மரபு, இருப்பிட மரபுச் சொற்கள் என ஐந்து வகையான மரபுச் சொற்கள் இடம் பெற்றுள்ளன.
(i) குயில் – கூவும்
(ii) மயில் – அகவும்
(iii) நாய் – குரைக்கும்
(iv) ஆடு – கத்தும்.
மொழியை ஆழ்வோம்
அ. கேட்டல்
(i) எளிய, இனிய ஓசைநயம் மிக்க தமிழ்ப்பாடல்களைக் கேட்டு மகிழ்க.(ii) தொலைக்காட்சி, வானொலி, பள்ளி விழாக்கள், ஊர்த்திருவிழா போன்றவற்றில் நிகழும் பட்டிமன்றம், கவியரங்கம் ஆகியவற்றைக் கேட்டு மகிழ்க.
ஆ. பேசுதல்
(i) உமக்குப் படித்த தலைப்புகளில் வகுப்பறைப் பட்டிமன்றத்தில் பங்கேற்றுப் பேசுக.(ii) உமக்குப் பிடித்த பறவைகளுள் ஏதேனும் ஒன்றுபற்றி ஐந்து மணித்துளி பேசுக.
இ. படித்தல்
(i) இனிய, எளிய தமிழ்ப்பாடல்களைப் படித்து மகிழ்க.(ii) சிறுவர் இதழ்களில் இடம்பெற்றுள்ள விலங்கைப் பற்றிய கதைகளுள் ஏதேனும் ஒன்றைப் படித்துக்காட்டுக.
ஈ. எழுதுதல்
1. சொல்லக்கேட்டு எழுதுக.2. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
(i) நல்லறிவு – திருக்குறளைப் படித்தால் நல்லறிவு பெறுவார்கள்.(ii) தென்னைமரம் – தென்னை மரம் முழுமையாக செழுமை நிறைந்ததாகவே காணப்படுகின்றது.
(iii) கவியரங்கம் – கவியரங்கில் நான் கவிதை வாசித்தேன்.
(iv) நன்றி – இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.
3. கீழ்க்காணும் சொற்றொடர்களைப் படித்து வினாக்களுக்கு விடையெழுதுக.
2. மேரி என்ன செய்தாள்? விடை : மேரி ஆடினாள்
3. பாட்டி என்ன செய்தார்? விடை : பாட்டி தும்மினார்
4. எது பறந்தது? விடை : ஈ பறந்தது
5. தூங்கியது எது? விடை : பூனை தூங்கியது
6. புலி என்ன செய்தது? விடை : புலி உறுமியது
4. உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள். நம் தாய்மொழியாம் தமிழ் காலத்தால் முந்தையது மட்டுமன்று; உலகின் முதன்மொழியும் ஆகும். வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த பெருமை நம் தமிழ்மொழிக்கே உண்டு. தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்துபிரிவுகளைத் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயரிய தத்துவத்தை உலகுக்கு உணர்த்தியது, நம் தமிழ்ப்பண்பாடு.
1. தமிழ் என்னும் சொல்லின் பொருள் யாது? விடை : இனிமை2. உறவினர் என்னும் பொருள் தரும் சொல்லை பத்தியிலிருந்து எடுத்தெழுதுக. விடை : கேளிர்
3. தமிழ்மொழியில் என்னென்ன இலக்கணப் பிரிவுகள் உள்ளன? விடை : எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
4. தமிழ்ப் பண்பாடு உலகுக்கு உணர்த்திய உயரிய தத்துவம் யாது? விடை : யாதும் ஊரே யாவரும் கேளிர்
5. பிரித்து எழுதுக. தமிழிலக்கணம் – விடை : தமிழ் + இலக்கணம்
5. எடுத்துக்காட்டில் உள்ளதுபோல் மாற்றி எழுதுக.
(i) ஹேண்ட்ரைட்டிங் காம்பிடிசன்ல எனக்குப் ஃபர்ஸ்ட் பிரைஸ் கிடைத்தது. -> கையெழுத்துப் போட்டியில் எனக்கு முதற்பரிசு கிடைத்தது.(ii) ஃபஸ்ட் பீரியட் தமிழ் கிளாஸ் நடந்தது. -> விடை: முதல் பாடவேளை தமிழ் வகுப்பு நடந்தது.
(iii) நான் ட்ராயிங் நோட்டில் உள்ள பிச்சர்க்கு கலர் கொடுத்தேன். -> விடை: நான் ஓவிய ஏட்டில் உள்ள படத்திற்கு வண்ணம் கொடுத்தேன்.
6. பொருத்தமான சொற்களால் பாடலை நிறைவு செய்க.
(உண்மை, பயிற்சி, பொறுமை, கல்லாமை, ஊக்கம், கல்வி, பொறாமை, முயற்சி)
பொறுமை உடையவன் மாணவன்.கல்வி கற்பவன் மாணவன்.
பயிற்சி பெறுபவன் மாணவன்.
உண்மை பேசுபவன் மாணவன்.
பொறாமை அற்றவன் மாணவன்.
கல்லாமை தவிர்ப்பவன் மாணவன்.
முயற்சி செய்பவன் மாணவன்.
ஊக்கம் கொள்பவன் மாணவன்.
மொழியோடு விளையாடு
1. பாரதிதாசனின் பாடலில் வரும் வருணனைச்சொற்களை எடுத்து எழுதுக
2. குறுக்கெழுத்து புதிரில் உள்ள வினாக்களுக்கு விடையைக் கண்டுபிடி.
3. குறிப்புகளைக் கொண்டு விடைகளைக் கண்டுபிடி.
1. உருண்டோடும் பெரிய தேரைக் காப்பது அதன் சிறிய -> அச்சாணி2. இரும்பை இழுக்கும் சக்தி கொண்டது -> காந்தம்
3. அம்மா - வேறு சொல் -> அன்னை
4. ஆத்திசூடி எழுதிய பெண்பாற் புலவர் -> ஒளவையார்
5. எதிர்ச் சொல் தருக. மேடு -> பள்ளம்
6. காகம் தனக்குக் கிடைத்த உணவைப் பிற காகங்களோடு --------- உண்ணும். -> பகிர்ந்து
7. உன் விடைகளின் மூன்றாவது எழுத்துகளை வரிசைப்படுத்தினால் -> சாதனையாளர்
4. சொல்லிலிருந்து புதிய சொற்கள் உருவாக்குக.
எ.கா. காஞ்சிபுரம் - கா, காஞ்சி, புரம், காசி, காரம், சிரம்1. புதுக்கவிதை – புது, புவி, கவி, கவிதை, புதை, தை
2. நெல்லிக்கனி – நெல், நெல்லி, கனி, கல், கலி
3. கற்குவியல் – கயல், கவி, கல், குவியல், குவி, வில்
5. சொற்களைக் கொண்டு புதிய தொடர்களை உருவாக்குக.
(அகிலா, பாடம், படித்தாள், நான், படித்தேன், சென்றாள், சென்றேன், வந்தாள், பள்ளிக்கு, வீட்டிற்கு)1. அகிலா பாடம் படித்தாள்
2. நான் பாடம் படித்தேன்
3. அகிலா வீட்டிற்குச் சென்றாள்
4. நான் வீட்டிற்குச் சென்றேன்
5. அகிலா பள்ளிக்கு வந்தாள்
நிற்க அதற்குத் தக...
(ii) தாய்மொழியைப் போற்றுவேன்
அறிந்து கொள்வோம்
எழுத்துகளை எளிதாக அடையாளம் காண உதவும் பெயர்கள்:ண – 'டண்ணகரம்' | ந - 'தந்நகரம்' | ன - 'றன்னகரம்'
ர - இடையின 'ரகரம்' | ற - வல்லின 'றகரம்'
ல - மேல்நோக்கு 'லகரம்' | ள – 'பொது ளகரம்' | ழ – 'சிறப்பு ழகரம்'
செயல் திட்டம்
1. மொழி சார்ந்த எளிய பாடல்களைச் சேகரித்து எழுதி வருக.
அருள்நெறி அறிவைத் தரலாகும், அதுவே தமிழன் குரலாகும்...
3. பிடித்த கதை ஒன்றினை எழுதி அதில் இடம்பெற்றுள்ள மரபுச்சொற்களை அடிக்கோடிடுக.
5. 'உலகம்' என்னும் பொருள் தரும் சொற்களைப் பாடப்பகுதியிலிருந்து எடுத்தெழுதுக.
7. பாரதிதாசனின் படைப்புகளுள் எவையேனும் ஐந்து புத்தகங்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
கற்பவை கற்றபின்
விடை : மரபுச்சொற்கள் மரபு ரீதியாக வழங்கிவரும் சொற்களைக் குறிக்கும். ஒலி மரபு, இளமைப் பெயர் மரபு, வினை மரபு, உறுப்புப் பெயர் மரபு, இருப்பிட மரபுச் சொற்கள் என ஐந்து வகையான மரபுச் சொற்கள் உள்ளன.
விடை : இம்மரபுச் சொற்களைப் பின்பற்றவில்லையெனில் மொழி சிதைந்து விடும்.