வினா விடை
4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 1 : அலகு 1
ஆற்றங்கரை அரசுகள் | Kingdoms of Rivers
அ. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
1. சேர, சோழ, பாண்டியர்கள் -------------- என அழைக்கப்பட்டனர்.
விடை: ஆ) மூவேந்தர்கள்
2. சேரர்களில் புகழ் பெற்ற அரசராகக் கருதப்படு
விடை: இ) சேரன் செங்குட்டுவன்
3. சோழர்களின் துறைமுகம் ------------
விடை: அ) காவிரிபூம்பட்டினம்
4. பாண்டியர்களின் கொடியில் இடம்பெற்றுள்ள சின்னம் ------------- ஆகும்.
விடை: ஆ) மீன்
5. முல்லைக்குத் தேர் கொடுத்த வள்ளல் -------------- ஆவார்.
விடை: அ) பாரி
ஆ. பொருத்துக.
கேள்வி (Question)
1. சேரர்கள் - வைகை
2. சோழர்கள் - பாலாறு
3. பாண்டியர்கள் - பொய்கை
4. பல்லவர்கள் – காவிரி
விடை (Answer)
1. சேரர்கள் - பொய்கை
2. சோழர்கள் - காவிரி
3. பாண்டியர்கள் - வைகை
4. பல்லவர்கள் – பாலாறு
இ. குறுகிய விடையளி.
1. சேரர்களில் புகழ் பெற்ற அரசர்கள் யாவர்?
(i) இமயவர்மன் நெடுஞ்சேரலாதன்
(ii) சேரன் செங்குட்டுவன்
2. 'கடையேழு வள்ளல்கள்' என்போர் யாவர்?
(i) பேகன்
(ii) அதியமான்
(iii) பாரி
(iv) நெடுமுடிக்காரி
(v) வல்வில் ஓரி
(vi) ஆய்
(vii) நல்லி
3. கரிகாலனின் சாதனைகளைக் குறிப்பிடுக.
(i) வெண்ணி மற்றும் வாகைப் பறந்தலைப் போரில் சேரர் மற்றும் பாண்டியர்களை தோற்கடித்தார்.
(ii) காவிரியின் குறுக்கே கல்லணையைக் கட்டியுள்ளார்.
4. பல்லவர்களின் தலைநகரத்தையும் கடற்கரை நகரத்தையும் குறிப்பிடுக.
(i) பல்லவர்களின் தலைநகரம் காஞ்சிபுரம்.
(ii) அவர்களின் கடற்கரை நகரம் மகாபலிபுரம்.
ஈ. யாருடைய கூற்று?
1. "யானோ அரசன், யானே கள்வன்".
விடை: பாண்டியன் நெடுஞ்செழியன்.