5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 1 அலகு 3 : நல்ல குடிமகன்
பருவம் 1 அலகு 3 | 5th Social Science : Term 1 Unit 3 : Good Citizen
மனிதர்களுக்கு புலன்கள் உள்ளன. மனிதர்கள் தங்கள் புலன்களைப் பயன்படுத்தி சிந்தித்து செயல்படுகின்றனர். சுதந்திரமாக பிறக்கின்றனர். ஆனால் சமூகத்துடன் பிணைக்கப்பட்டுள்ளனர். அவர்களால் தனித்து வாழ முடியாது. அவர்களுக்கு சமூக, உணர்வுப்பூர்வமான ஆதரவு தேவை. சமுதாயத்தில் வாழ்வதற்கு அவர்கள் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நாம் சில பண்புகளையும், உரிமைகளையும் பிறப்பிலேயே பெற்றிருக்கின்றனர் இந்த பண்புகள் கல்வி நிலையங்களில் மேலும் மெருகூட்டப்படுகின்றன. ஒரு நபரை மதிப்புமிக்க மனிதனாக மாற்றுவததே கல்வியின் ஆகும்.
மாணவர்கள் இப்பாடத்தைக் கற்பதன் வாயிலாக
(i) மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பற்றி அறிந்துகொள்வர். (ii) நற்பண்புகள் பற்றித் தெரிந்துகொள்வர். (iii) நற்பண்புகளை வளப்படுத்தக்கூடிய காரணிகள் பற்றி தெரிந்துகொள்வர்.சமுதாயத்தை இயங்க வைக்கும் ஒரு நபரின் குணங்கள் தான் நற்பண்புகள். இந்த நல்ல குணங்களை அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். குடிமை என்ற சொல் ஒரு நாட்டின் மக்கள் அல்லது குடிமக்கள் பற்றியதாகும். மக்கள் ஒற்றுமையாக இணைந்து வாழ வேண்டும். அனைத்து வேறுபாடுகளையும் களைந்து ஒற்றுமையாக வாழ்வது ஒரு குறிப்பிடத்தக்க நற்பண்பாகும். பிறருக்கு உதவுதல் ஒரு முக்கியமான நற்பண்பாகும்.
மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது, அனைவரும் ஒன்று இன்றைய குழந்தைகள் நாட்டின் நாளைய குடிமக்கள் குழந்தைகளிடையே ஒழுக்க நெறி மற்றும் நற்பண்புகள் வளர வேண்டும். அதனால் அவர்கள் மதிப்புமிக்க குடிமக்களாக மாறுகின்றனர்.
-சுவாமி விவேகானந்தர்
செயல்பாடு நாம் எழுதுவோம்
1. உன் தாய்மொழி என்ன? -----------------------
2. -------------------------- என்பது சிறந்த கொள்கை.
3. வட இந்தியாவின் முக்கிய உணவு என்பது ---------------------------
4. ----------------------- தென்னிந்தியாவின் முக்கிய உணவு,
5. உனக்கு எத்தனை மொழிகள் தெரியும்? ----------------------------
தனிப்பட்ட நெறிமுறை என்பது ஒவ்வொரு தனிநபருக்குமான அடிப்படை மதிப்பு ஆகும். சில தனிப்பட்ட நெறிமுறைகளாவன: அன்பு, கருணை, சகிப்புத்தன்மை, நம்பிக்கை.
செயல்பாடு நாம் எழுதுவோம் (கோடிட்ட இடங்களை நிரப்புக)
1. அனைத்து உயிர்களிடத்தும் ------------------- காட்டவேண்டும்.
2. ------------------------- யோடு ஏழைகளுக்கு உதவுங்கள்.
3. --------------------- ஒரு சிறந்த
4. மிகச் சிறந்த உறவாகக் கருதப்படுவது ----------------------------
5. விருந்தினர்களை உபசரிப்பது ------------------------- ஆகும்.
6. துன்புறுபவர்களுக்கு நாம் ------------------ காட்டவேண்டும்.
7. எப்பொழுதும் -------------------- பேசவேண்டும்.
8. பொது இடங்களில் -------------------- யுடன் நடந்து கொள்ள வேண்டும்.
1. ---------------------- பெற மரங்கள் வளர்க்க வேண்டும்.
2. --------------------------- வாழ்ந்தால் கோடி நன்மை.
நற்பண்பு, பண்படுத்தப்பட்ட நன்னடத்தை ஒரு சமூகத்திற்கு மிக அவசியமான ஒன்றாகும். மொழி, மதம் எதுவாக இருந்தாலும் மக்கள் ஒற்றுமையாக இணைந்து வாழ்கின்றனர். இது பண்பாட்டு நெறிமுறைகளை வளர்க்க உதவும். நாம் அனைவரும் சகோதர, சகோதரிகளாக இணைந்து வாழ வேண்டும்.
பொது இடங்களில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? கீழ்க்காணும் நற்பண்புகளைப் பொது இடங்களில் பின்பற்ற வேண்டும்.
(i) மக்களுடன் நல்லுறவை எப்பொழுதும் பேணுதல் (ii) பெரியோர்களை மதித்தல் (iii) சகிப்புத் தன்மையுடன் இருத்தல் (iv) நட்பை பேணி வளர்த்தல்
நடத்தை சார்ந்த நெறிமுறைகளாவன: நேரம் தவறாமை, ஈடுபாடு, அனைவரையும் சமமாக நடத்துதல், சரியான நேரத்தில் வேலைகளைச் செய்தல், ஒழுக்கங்களைக் கடைப்பிடித்தல், தவறாமல் கடமைகளைச் செய்தல்.
ஒரு குடிமகன் என்பவர் ஒரு குறிப்பிட்ட நாட்டின் உறுப்பினராக இருந்து, பல்வேறு உரிமைகளை அனுபவித்து, தனது கடமைகளை நிறைவேற்றுகிறார். ஒரு இறையாண்மை பெற்ற அரசு தனது குடிமக்களுக்கு வாழும் உரிமை, கல்வி பெறும் உரிமை, வாக்களிக்கும் உரிமை, வேலை செய்யும் உரிமை, தேசத்தில் எங்கும் குடியிருக்கும் உரிமை ஆகியவற்றை வழங்குகிறது.
நல்ல நடத்தை, நல்லொழுக்கம் ஆகியவை குடிமை மதிப்பீடுகளே அன்றி வேறில்லை.
குடியுரிமை என்பது சிறந்த முறையில் குடிமக்களாக வாழ்வதற்கான உரிமை. இது அரசு நடவடிக்கைகளில் குடிமக்களின் பங்கேற்பையும் உள்ளடக்கியதாகும்.
சுகாதாரத்தைப் பேணிக்காப்பது ஒருமுக்கிய அம்சமாகும். ஒவ்வொருமாணவருக்கும் சுகாதாரமாக இருக்க கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் மேலும் கீழே உள்ள வழக்கத்தை பின்பற்ற வேண்டும்.
(i) அதிகாலையில் விழித்தெழல் (ii) பற்களை துலக்குதல் (iii) தினமும் குளித்தல் (iv) சுத்தமான ஆடைகளை அணிதல் (v) காலணிகள் அணிதல் (vi) முடியை ஒழுங்கு செய்து, நகங்களை வெட்டுதல் (vii) உணவுக்கு முன்னும் பின்னும் கைகளைக் கழுவுதல்.வழங்குதல் : Offer
பாதுகாத்தல் : Preserve
தன்னம்பிக்கை : Self confidence
5th Social Science : Term 1 Unit 3 : Good Citizen : Samacheer Book Questions and Answers.