5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 2 அலகு 2 : நீர்க்கோளம்
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
II. பொருத்துக.
2. உப்பங்கழி
3. இந்தியப் பெருங்கடலையும், வங்காள விரிகுடாவையும் இணைக்கிறது
4. உள்நாட்டு உப்பு ஏரி
5. ஆவிசுருங்குதல்
- பாக்நீர்ச்சந்தி
- மேகங்கள் உருவாதல்
- ஒடிசாவில் உள்ள சிலிகா
- தால் ஏரி
III. சரியா / தவறா எழுதுக.
IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.
(i) நீர்க்கோளம் என்பது, நமது கோளில் அடங்கியுள்ள முழு நீர்ப்பரப்பினையும் குறிக்கும்.
(ii) பூமியின் மேற்பரப்பில் உள்ள நீர், நிலத்தடி நீர் மற்றும் காற்றில் கலந்துள்ள நீர் ஆகிய அனைத்தும் நீர்க்கோளத்தில் அடங்கும்.
(iii) ஒரு கோளின் நீர்க்கோளமானது நீர், நீராவி அல்லது திடநிலையில் பனிக்கட்டி வடிவில் இருக்கும்.
(iv) நீர்க்கோளமானது ஏறக்குறைய 71% பூமியில் சூழந்துள்ளது. இதில் நீர் நீர்மவடிவிலும், உறைந்த வடிவிலும் காணப்படுகிறது.
(v) 97% உப்பு நீராகவும் மீதமுள்ள 3% நீர் நிலத்தடியிலும் காணப்படுகிறது.
(i) நமது அன்றாட வாழ்வில் நீரின் தேவை மிகுதியாக உள்ளது. பருக, குளிக்க, சமைக்க போன்ற பல அன்றாட நடவடிக்கைகளுக்கு நீர் தேவைப்படுகிறது.
(ii) விலங்குகள் மற்றும் தாவரங்கள் உயிர்வாழ நீர் தேவை.
(iii) நீர் இல்லாவிடில், நீர் ஆவியாகி மேகங்களாக உருவாக முடியாது. அதனால் மழை இருக்காது.
நீர்ப்பரப்புகளின் வகைகள் பின்வருமாறு:
பெருங்கடல்கள், கடல், ஆறுகள், ஏரிகள், வளைகுடா, விரிகுடா, உப்பங்கழி, நீர்ச்சந்தி, அருவி
V. விரிவான விடையளிக்க.
முதல் நிலை : ஆவியாதல்
சூரிய ஒளி, நீர்ப்பரப்புகளான பெருங்கடல்கள், கடல்கள், ஏரிகள் போன்றவற்றின் மேல் விழுவதால், நீர் மெதுவாக ஆவியாகிக் காற்றில் கலக்கிறது.
இரண்டாம் நிலை : ஆவி சுருங்குதல்
நீர் ஆவியாகி மேலே செல்லும்பொழுது குளிரான வெப்பநிலை, அவற்றைத் குளிர்வித்து மீண்டும் நீர்மமாக மாற்றுகிறது. இதுவே ஆவிசுருங்குதல் எனப்படுகிறது. காற்றானது இந்த நீர்மத்தைச் சுழற்றுவதால் மேகங்கள் உருவாகின்றன.
மூன்றாம் நிலை : மழைப்பொழிவு :
காற்றின் இயக்கத்தால் மேகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. அவை மழைபொழியும் மேகங்களாக மாறி, மழையாக மீண்டும் பூமியின் மேற்பரப்பை வந்தடைகிறது. மழைப்பொழிவானது தட்ப வெப்ப நிலையைப் பொருத்து மழையாகவோ, ஆலங்கட்டி மழையாகவோ, பனிப்பொழிவாகவோ, பனித்துளியாகவோ இருக்கக்கூடும்.
நான்காம் நிலை (வழிந்தோடுதல் மற்றும் உறிஞ்சப்படுதல்) :
நீரானது பெருங்கடல்கள், ஆறுகள் அல்லது நிலமேற்பரப்பில் வழிந்தோடுகிறது அல்லது மண்ணால் உறிஞ்சப்படுகிறது. இச்சுழற்சி தொடர்ந்து நடைபெறுகிறது.
(i) தூவாலை குழாயைப் (Shower) பயன்படுத்திக் குளிப்பதைக் குறைத்துக்கொண்டு வாளியில் தண்ணீர் எடுத்துப் பயன்படுத்த வேண்டும்.
(ii) பாத்திரங்களைக் கழுவியபின், குழாய்கள் மூடப்பட்டுள்ளனவா என்பதனைக் கவனிக்க வேண்டும்.
நீர்நிலைகளின் படங்களைச் சேகரித்து, ஒவ்வொன்றையும் பற்றி ஒரு வாக்கியத்தை எழுதுக.